நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மெல்பேர்ண் பொதுக்கூட்டம் (26/03/2011)
நாடு கடந்த தமிழீழ அரச பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் மெல்பேணில் நடைபெறவுள்ளது. நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் பற்றியும் அதன் அடுத்த கட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்படவுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசின் துணைப் பிரதமரும், நிதி அமைச்சருமான பேராசிரியர் செல்வநாதன் அவர்களும், ஏனைய நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளுகின்றனர். நாடு கடந்த தமிழீழ அரசின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரும், ஆலோசகருமான திரு சிவேன் சிவநாயகம் அவர்களும் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.
அத்துடன் விக்ரோரிய மாநில முதன்மை தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளுகின்ற இக்கூட்டம், Vermont South Community House இல் நடைபெறவுள்ளது. எதிர்வரும் மார்ச் மாதம் 26 ஆம் திகதி அன்று மாலை 7 மணி தொடக்கம் 8.30 மணி வரை இக்கூட்டம் நடைபெறும்.
அனைத்து மக்களையும் கலந்துகொண்டு நாடு கடந்த தமிழீழ அரசின் செயற்பாடுகள் தொடர்பிலான விளக்கங்களையும், உங்கள் கேள்விகளுக்கான பதில்களையும் பெற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
இக்கூட்டத்தில் நாடு கடந்த தமிழீழ அரசின், தேசிய அட்டை வழங்கும் நிகழ்வும் நடைபெறவுள்ளது என்பதையும் மகிழ்ச்சியுடன் அறியதருகின்றோம். அத்துடன் புதிய நாடு கடந்த அரசின், தேசிய அடையாள அட்டைகளை பெறுவதற்கான பதிவுகளும் அன்றையதினம் மேற்கொள்ளப்படும்.
நிகழ்வு நடைபெறும் இடம்
Vermont South Community House
Karobran Drive, Vermont South, VIC 3133
(Melway ref: 62 G7)
நிகழ்வு நடைபெறும் நேரம்
7:00pm - 8:30pm, Saturday, 26 March 2011
இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (புதன்கிழமை, 16 மார்ச் 2011 17:34)

