சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் தபால் அட்டைகளை வெளியிட்டது நாடுகடந்த தமிழீழ அரசு(படங்கள் இணைப்பு)
மக்கள் போராட்டங்களுக்கு வலுவூட்டும் வகையில், சுயாதீன சர்வதேச விசாரணையை வலியுறுத்தும், தபால் அட்டைகள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
ஈழத்தமிழினத்தின் மீது சிறிலங்காவினால் கட்டவிழ்த்து விடப்பட்ட போர்குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்கள், இனப்படுகொலை ஆகியனவற்றுக்கு, சுயாதீன சர்வதேச விசாரணையின அவசியத்தை, இந்த தபால் அட்டைகள் வலியுறுத்தி நிற்கின்றன.
புலம்பெயர் தமிழர்கள், அவர்கள் வாழும் அந்தந்த நாட்டு வெளிநாட்டு அமைச்சுக்களுக்கும், ஐ.நா மனித உரிமைச் சபையில் அங்கம் வகிக்கின்ற உலக நாடுகளது தூதரகங்களுக்கும், இந்த தபால் அட்டையை, விரைந்து அனுப்பி வைக்குமாறு வேண்டப்பட்டுள்ளனர்.
Cameroon ,Congo ,Djibouti , Libya , Mauritania , Mauritius, Nigeria ,Senegal ,Uganda, Bangladesh, China ,India ,Indonesia ,Jordan ,Kuwait,Kyrgyzstan ,Malaysia ,Maldives ,Philippines ,Qatar ,Saudi Arabia ,Thailand ,Czech Republic, Hungary ,Poland ,Republic of Moldova ,Romania ,Russian Federation ,Chile ,Costa Rica ,Cuba ,Ecuador ,Guatemala ,Mexico ,Peru ,Uruguay ,Austria ,Belgium ,Italy ,Norway ,Spain , Switzerland ,United States
ஐ.நா நிபுணர் குழுவினால் பரிந்துரைக்கப்பட்டவாறு, சுயாதீன சர்வதேச விசாரணையே, சிறிலங்காவில் நடாத்தப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில், இந்த தபால் அட்டை அமைக்கப்பட்டுள்ளதோடு ஈழத்தமிழர்களுக்கான நீதியை உலகத்திடம் கோரிநிற்கின்றது.
தபால் அட்டைகளை பெற்றுக் கொள்ள விரும்புவோர், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகள் ஊடாகவும் மற்றும்
இந்த தொலைபேசி,
இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
மின்னஞ்சல் ஊடாக தொடர்பு கொண்டும், பெற்றுக் கொள்ளலாம் என நா.த.அரசாங்கத்தின் தகவற்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டது (திங்கட்கிழமை, 20 பெப்ரவரி 2012 12:33)

